குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

17.3.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

போனாபோவுது வாங்க
...நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது ( 4 : 103 )

அன்றாட வாழ்வில் ஒன்று " இந்த மனை சென்ற வருஷம் விற்பனைக்கு என்னிடம் வந்தது, வாங்க வசதி இருந்தும்

வாங்காமல் விட்டு விட்டேனே இப்பொ 4 , 5 ,மடங்கு விலை ஏறிடுச்சே. அப்போவே வாங்கி இருந்தால் நல்ல லாபமாசே"

இப்படி பலவற்றில் லாபம் கிடைப்பது கண் முன்னே தெரியும் போது மனசு லப்போ லப்போனு அடித்து கொள்வது மனித இயல்புதான்

சரி, இந்த மனித இயல்பு மார்க்கத்தில் எந்தளவு? பார்க்கலாமா?


இஸ்லாத்தின் தலையாய கடமை தொழுகை. திருமறை குர் ஆனிலும், நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளிலும் தொழுகைக்கு வழங்க பட்டுள்ள அளவுக்கு வேறு எதற்கும் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. நபி (ஸல்) அவர்கள் தமது மரணத்தருவாயில் தொழுகையை பேணுங்கள் தொழுகையை பேணுங்கள் என கூறி கொண்டே இருந்தார்கள் - உம்முசலமா(ரலி) இப்னுமாஜா. தொழுகையைபற்றி கூறி கொண்டுமட்டுமல்ல, தன்னால் முடியா நிலையிலும் இருவர் தோளில் தொங்கி கொண்டு கண்மணி நாயகத்தின் கால்கள் தரையில் கோடு போட்டுகொண்டே செல்லும் அளவு சென்று தொழுதார்கள்.

முஸ்லிமையும் , முஸ்லிம் அல்லாதவர்களையும் வேறுபடுத்தி காட்டுவதில் முக்கிய பங்கு இந்த தொழுகைதான். தற்போது பெரும்பாலான முஸ்லிம்களை தொழுபவர்களாக காண முடிகிறது. அல்ஹம்துல்லிலாஹ். அதே நேரத்தில் ஒன்றை மனதில் வைக்கவேண்டும், நபி (ஸல்) அவர்கள் தான் நமக்கு முன் மாதிரி அவர்கள் தொழுகையை எப்படி காட்டி தந்தார்களோ அது போல் தொழுவதையே அல்லாஹ் ஏற்று கொள்கிறான். மணிகணக்கில் தொழுதாலும் நபி (ஸல்) காட்டி தராதது எந்த புண்ணியமும் இல்லாமல் போகும்.

நபி (ஸல்) அவர்கள், தொழுகையை நிறைவு செய்தவரை "நீர் தொழவில்லை, மீண்டும் தொழு" என்றார்கள். அவர் மீண்டும் தொழுதார்.நபி (ஸல்) அவர்கள் மீண்டும் சொன்னதையே திரும்ப சொன்னார்கள்.தொழுதவர் மூன்று முறை தொழுத பின், யா ரசூலுல்லாஹ் எப்படி தொழ வேண்டும் என கற்றுத்தாருங்கள் என்றார்.நபி (ஸல்) அவர்கள் கற்று கொடுத்தார்கள்.

தமது தொழுகையில் கவனமற்று தொழுபவருக்கு கேடுதான் (107 : 4 ,5 )

* அல்லாஹ்வின் முன் நிற்கிறோம் என்ற பயபக்தி இல்லாமல் தொழுவது

* தொழுகையில், தொழுகிறோம் என்ற சிந்தனையே இல்லாமல் இருப்பது

* பிறர் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என, அவர்களுக்காக தொழுவது

* இப்படித்தான் தொழனும் என இருக்க, தம் விருப்பபடி கூட்டி குறைத்து தொழுவது


இனி நம் நிலையை நாமே பார்க்கலாமே..

1 அதிகமாக தவற விட்ட தொழுகை எது?

2 பாஜர் (சுபுஹு) தொழுகையை தொடர்ந்து தொழும் பழக்கம் உண்டா? இல்லையா?

3 நபி (ஸல்) அவர்கள் காட்டி தந்தபடி தொழுகிறோமா?

4 உபரி தொழுகைகளை தொழுகிறோமா?

இந்த கேள்விகளுக்கு நம்முடைய பதில்?

போனது போகட்டும், குறை இருப்பின் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி, அவற்றை சரி செய இனியாவது முயற்சி செய்யலாமே?

, ,