குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

22.5.11

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

இந்தியாவின் இருண்ட நாள்
almighty-arrahim.blogspotcom
பாபர் மசூதி அமைந்திருந்த சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்? இது தொடர்பான வழக்கில் 2010 செப்டம்பரில், தொல்பொருள் துறை
 நடத்திய அகழ்வாராச்சியின் முடிவுகளை அடிப்படையாக கொண்டு சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரித்து தீர்ப்பு வழங்கியது அலகாபாத் நீதிமன்றம். சூரஜ்பன் போன்ற வரலாற்று அறிஞர்கள் இந்த அகழ்வாராய்ச்சியில் அடிப்படை நியதிகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாடினர். ஆனால்

அகழ்வாராச்சி குழுவில் இருக்கும் பேராசிரியர் ஏ.கே. மிஸ்ரா "நீதிமன்ற உத்தரவுபடி நங்கள் செய்யும் போது, நியதிகள் பற்றி கவலைபட தேவையில்லை " என்றார்.ஆக அயோத்தியில் செயல்பட்ட அகழ்வாராசியே சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கையில், சர்ச்சைக்குரிய நிலம் குறித்த முடிவுகளுக்கு அந்த ஆராச்சியின் முடிவுகளை சாட்சியமக்கியது வினோதம் தான். 'நம்பிக்கை'யின் அடிப்படையிலான இந்த தீர்ப்பு...உண்மைகளுக்கும், வரலாற்று சான்றுகளுக்கும், வரலாறு எழுதும் பாரம்பரியத்துக்கும் நேர்ந்த அவமானம் என்றார் வரலாற்று ஆய்வாளர் டி.என்.ஜா.

17 ம் 18 ம் நூற்றாண்டுகளுக்கு முன்பு அயோத்தி, இந்துகளின் புனித தலமாக இருந்ததில்லை. 17 ம் நூற்றாண்டுக்கு முன்னால். உத்திரப்பிரதேசம் முழுவதிலுமே கூட ஒரு ராமர் கோயில் கூட கட்டப்படவில்லை என்பதே வரலாற்று ஆய்வாளர்கள் சொல்வது. பாபர் மசூதியோ, 1528 ம் ஆண்டு கட்டப்பட்டது.ஆனால், இவற்றை எல்லாம் கணக்கில் எடுக்காமல், கோயிலை இடித்துவிட்டுத்தான் மசூதி கட்டப்பட்டது என்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்

1949 ம் அப்போது பைசாபாததின் இணை ஆணையராக இருந்த கே கே கே நாயர் ஆர் எஸ் எஸ் அமைப்பின் உறுபினராக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் . பாபர் மசூதியின் நடு பகுதியில் ராமர் சிலையை வைத்து வழிபட அவர் அனுமதி அளித்தார். அப்போது தொடங்கிய பிரச்சனை,அதன் பின் அரசியல் ஆதாயங்களுக்காக பா ஜ க வினரால் பெரிதக்கபட்டு, இன்று வரையிலும் சிக்கல் நீடிக்கிறது.

அலகபாத்உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கில் கருது தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்டாப் ஆலம் மற்றும் லோதா ஆகியோர் அடங்கிய பென்ச், "சர்சிக்குரிய நிலத்தை பிரிக்கும்படி அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியது விந்தையாக இருக்கிறது" என்று கூறி தடை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

"உச்ச நீதிமன்றத்துக்கு வேறு எந்த தீர்வுமே கிடையாது. எங்களுக்குத்தான் கொடுத்தாக வேண்டும். ஒரு வேளை தீர்ப்பு எதிராக போனால், இந்த நாடு வகுப்பு வன்முறையால் அழிவதை யாராலும் தடுக்க முடியாது" என்று மிரட்டுகிறார் ராம்விலாஸ் வேதாந்தி. இதற்க்கு இடையேயும் உச்சநீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்றத்தை குட்டி இருப்பதால், இறுதி தீர்ப்புக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது

கவின் மலர்
நன்றி: ஆனந்த விகடன் 25 / 5 / 11
, ,