குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

27.10.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

பிரியாவிடை
almighty-arrahim.blogspot.com
பிரியாவிடைகளும்

பிள்ளைகளுக்கு

முத்தங்களும்

என

வாழ்ந்துகொண்டிருந்தது

விமானநிலையம்


எட்டியஉயரத்தில்

கிட்டியநெஞ்சில்

மகனைமுகர்ந்தது

மூதாட்டிஉம்மா



கடவுச்சீட்டு

அடங்கியகைப்பை

முழங்கையில்தொங்க

கடைக்குட்டியை

கைகளில்ஏந்தி

வாப்பா

பயணம்சொல்ல

குழந்தை

தானும்வருவதாகச்

சொன்னது.



எல்லாச்

சொந்தங்களிடமும்

ஸ்பரிஷமோ

பாஷையோ

விடைதர…



புன்னகைபோர்த்திய

முகச்சோகமும்

புர்காமூடிய

அகச்சோகமும்

கலாச்சாரநாகரிக

கட்டுக்குள்நிற்க

மனைவியின்

கண்கள்மட்டுமே

முழுப்

பெண்ணாகிப்போக…



எல்லாவினாக்களுக்கும்

ஒரேவிடையாய்

மெல்லத்தோன்றி

துடைப்பதற்குள்

சிந்தியது

உள்நாட்டுக்

கண்ணீர்த்துளியொன்று.



பிரியமானவளைப்

பிரியமனமின்றி

பொதிவண்டிதள்ளி

விதிஎண்ணிப்போக

தானியங்கிப்படிகளில்

தடுமாறி

சுதாரிக்கும்போது

சிதறிவிழுந்தது

வெளிநாட்டில்பிழைக்கும்

சபுராளிவாழ்க்கை!

                                       b.sabeer ahamed
, ,