குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

22.6.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

விழிப்புணர்வின் முதல் படி
almighty-arrahim.blogspot.com
கனவு மெய்ப்பட வேண்டும் - உயர் 
கல்வி வசப்பட வேண்டும்!
கற்க நினைப்ப தெல்லாம் - நாம் 
கற்று நிறைவுற வேண்டும்.

கற்றவ ரெல்லாம் வென்றார் - இதை
கருத்தினில் ஏற்றிட வேண்டும்
கல்லாதோரே தோற்றார் - என
கவனத்தில் கொண்டிட வேண்டும்!

பட்டம் படித்திட வேண்டும் - அதில்
பதக்கம் கிடைத்திட வேண்டும் 
விட்ட உரிமைகள் ளெல்லாம் - நாம்
மீட் டெடுத்திட வேண்டும்!

தொழிலுக் கென்று கல்வி - நாம் 
தேடிக் கற்றல் வேண்டும்
பதவிக் கென்று படிப்பை - இனி 
பார்த்துப் படித்திட வேண்டும்!

ஆட்சி அதிகாரம் வேண்டும் - நமக்கு
அரசாங்க வேலையும் வேண்டும் அன்றாடங் காய்ச்சியேயாயினும் - நாம் வென்றாள கல்வியே வேண்டும்.

அதிக மதிப்பெண் வேண்டும் - அதை அடைய முனைப்பு வேண்டும் 
சிகரம் தொடும் வித்தை - நாம்
சேர்ந்து பயின்றிடவேண்டும்

கல்லாமை வெளியேற வேண்டும் - உடன் அறியாமை புறந்தள்ள வேண்டும் 
கற்றுத் தெளிந்து நாமும் - எதிர் காலத்தை வென்றிட வேண்டும்!

மகத்துவம் மிக்க மருத்துவம் - கற்று மக்களைக் காத்திட வேண்டும் மடமை போக்கிடும் அறிவியல் - படித்து மாட்சிமை பெற்றிட வேண்டும்

சதிகளை எதிர்த்திட சட்டம் - நம் விதியென படித்திட வேண்டும் 
சமூகம் காத்திட அரசியல் - முழு 
சாஸனம் கற்றிட வேண்டும்!

கல்வி விழிப்புணர்வு வேண்டும் - அது பல்கிப் பெருகிடவும் வேண்டும்!
கற்ற மூத்தவ ரெல்லாம் - வந்து கைதூக்கி கரையேற்ற வேண்டும்!

சபீர்அஹ்மது
அபுஷாஹ்ருக்
, ,