குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

14.2.15

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

கொழுப்பை கரைக்கும் காளான்
almighty-arrahim
மக்களின் விருப்ப உணவான காளானில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் தான் காளான்.
பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான, காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது.

இதில் மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான டி அதிகம் உள்ளது.

காளானின் மகத்துவங்கள்

காளான் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

இதயத்தை பாதுகாப்பதில் காளான் பெரும் பங்கு வகிக்கின்றது.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

காக்காய் வலிப்பு, மூளை நோய், வலிமை குறைவு, மஞ்சள் காமாலை, மூட்டு வலி, தலையில் நீர்கோத்தல் உள்ளிட்ட பல நோய்களை காளான் கட்டுப்படுத்துகிறது

காளான் சூப்

முதலில் ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி, வைத்து நீரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

தண்ணீரானது நன்கு கொதித்ததும் அதில் பொடியாக நறுக்கிய காளானை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடித்து காளானை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும்.

அடுத்து புதினா மற்றும் மல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவை சேர்த்து கிளற வேண்டும்.

பின்பு மீதமுள்ள சோள மாவு மற்றும் உப்பை, தேவையான அளவு தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பிறகு வேக வைத்துள்ள காளானை அத்துடன் சேர்த்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சுவையான காளான் சூப் ரெடி.

இதன் மேல் மிளகு தூள் சேர்த்து பரிமாறினால் சூப்பராக இருக்கும்.

பயன்கள்

பெண்களுக்கு கருப்பை பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

தீராத காய்ச்சலுக்கு விரைவில் நல்ல பலனை தரும்.

மார்பக புற்றுநோய் வராமல் இருக்க உதவும்.




காளான் குழம்பு

முதலில் காளானை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானதும், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின் தக்காளியை சேர்த்து, தக்காளியை நன்கு வதக்க வேண்டும்.

பிறகு காளான், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, காளான் நன்கு வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.

பின்னர் தேங்காயை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியை தூவினால், சூப்பரான காளான குழம்பு தயார்.

பயன்கள்

சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடுவது மிகவும் நல்லது.

தாம்பத்திய உறவு பிரச்சனை, முதுமை குறைவு, காய்ச்சல், பாக்டீரியா நோய்கள், நரம்பு வலி உள்ளிட்ட நோய்கள் குணமடையும்.

இதை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம், இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைந்துவிடும்.
, ,