குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

30.1.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

தீயால் வாட்டப்பட்ட கோழிக்கறி
almighty-arrahim.blogspot.com
இன்றைய நவீன உலகில் துரித உணவுகளை நோக்கி மக்கள் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலிருந்து வரும் வாசனை மற்றும் சத்துக்கள் ஏதும் தராத சுவைக்காக அதனை ஆசைப்பட்டு சாப்பிட்டுவிட்டு, பின்னர் இளம் வயதிலேயே மாரடைப்பு, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.
அதில் ஒன்றான கிரில்டு உணவுகள் பற்றி பார்ப்போம்,

கிரில்டு உணவுகள் எப்படித் தயாராகின்றன?

இறைச்சியில் மசாலா தடவி, ஒருநாள் முழுவதும் அல்லது குறைந்தது ஆறு மணி நேரமாவது ஊறவைக்கின்றனர். இதனுடன், சாஸ், பதப்படுத்திகள், சுவையூட்டிகள் போன்ற அனைத்தையும் கலந்து, கிரில்டு பாக்ஸ் அல்லது தந்தூரி அடுப்பில் வேகவைக்கின்றனர்.

தீயில் 20 நிமிடங்களாவது சுட்டுஎடுக்கின்றனர். இறைச்சியை மட்டும் தீயில் சுட்டால், மோசமான விளைவுகள் அதிகம் இருக்காது. இறைச்சியுடன் எண்ணெய், மசாலா பொருட்கள், சுவை மற்றும் நிறத்துக்காகச் சேர்க்கப்படும் ரசாயனங்கள் நெருப்பில் வாட்டப்படும்போது, பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இறைச்சிகள் தரமானவையா?

இதில், பயன்படுத்தப்படும் இறைச்சிகள் தரமானவையா என்று பார்த்தால் நிச்சயம் கிடையாது.

ஏனெனில், மீதிய இறைச்சியை இறைச்சியை ஃப்ரீஸரில் வைத்துப் பயன்படுத்துகின்றனர். பிரஷ்ஷான இறைச்சியை வாங்கிச் சமைக்கும்போது பாதிப்பு இல்லை.

ஆனால், முறையாகப் பதப்படுத்தப்படாத இறைச்சிகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அசைவ ஹொட்டல்களில் 10, 15 முழுக் கோழிகள் கம்பியில் குத்தப்பட்டு கிரில் பாக்ஸில் சுழன்றுகொண்டே இருக்கின்றன. தவிர, மசாலாக்கள் தடவப்பட்ட நிலையில் இன்னும் நிறையக் கோழிகள், உள்ளே ஃப்ரீஸரில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஒரே நாளில் தீர்ந்துவிடுவது இல்லை.

tech.lankasri.com
, ,