குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

9.8.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ரமளான் மாதம்
almighty-arrahim.blogspotcom
இது ஒரு உன்னதமான பருவகாலமாகும். இம்மாதத்தில் அல்லாஹ் ஏராளமான கூலிகளை வழங்குகின்றான்.
ஏராளமான அருட்கொடைகளை அளிக்கின்றான். இது நன்மைகள் மற்றும் அருட்கொடைகளின் மாதம்! வெகுமதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம்!!
இந்த மாதத்தைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்:

ரமளான் மாதம் எத்தகையதெனில் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதாகவும்,
சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடியதாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது.
இதையே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் :
இறையருளும் பாவமன்னிப்பும், நரகத்திலிருந்து விடுதலையும் சூழ்ந்திருக்கும் மாதம்! ஆம்! இம்மாதத்தின் ஆரம்பம் அருள்மிக்கதாகவும் நடுப்பகுதி பாவமன்னிப்பை வழங்கக் கூடியதாகவும், இறுதிப் பகுதி நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்யக் கூடியதாகவும் உள்ளது.
மேலும், ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. மேலும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றது.அபூ ஹுுரைரா ரலி புகாரி 1899.

இம்மாதத்தில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுவது - நல்லமல்கள் பெருகுவதற்கும், அமல்கள் செய்பவர்களுக்கு ஆர்வமூட்டுவதற்காகவும்!
இதே போன்று நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுவது - இறைநம்பிக்கையாளர்களுடைய பாவங்கள் குறைக்கப் படுவதற்கும்!
ஷைத்தான்கள் விலங்கிட்பட்டு சங்கிலிகளால் பிணைக்கப் படுகிறார்கள் - ஆதலால் வேறு மாதங்களில் தீமைகள் புரியுமாறு மனிதர்களைத் தூண்டுவது போல் இம்மாதத்தில் முடியாது.
இத்தகைய கண்ணியமிக்க மாதமான ரமளான் மாதத்தைப் பற்றிய சிறப்புக்களை, எதிரொலி வாசகர்களுக்காக, எங்களால் முடிந்தளவு தொகுத்துத் தந்துள்ளோம். எல்லாப் புகழும் இறைவனுக்கே! இப்பணி தொய்வின்றிச் செயல்பட சகோதரர்கள் அனைவரும் இந்நந்நாளில் இறைவனிடம் பிரார்த்தனையும் செய்யவும்.
 
நோன்பு அல்லாஹ்வுக்குரிய வழிபாடு:

ஒரு முஸ்லிம் மீது கட்டாயக் கடமையாக இறைவன் ஆக்கியிருக்கும் கடமைகளில் இந்த நோன்பும் ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்தக் கட்டாயக் கடமைகளில் ஒன்றான நோன்பு, அதற்குரிய மாதத்தில் நோற்கும் பொழுது, மனிதன் தன்னுடைய இறைவனின் பக்கம் நெருங்கிச் செல்கிறான். அதுமட்டுமல்ல இறைவன் கட்டளையிட்டு விட்டான் என்பதற்காக அந்த ரமளான் மாத்தில் தனக்கு மிகவும் விருப்பமானவற்றில் இருந்தும் அவன் ஒதுங்கி, உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் - இவை எல்லாம் கடந்த மாதங்களில் தான் விரும்பும் பொழுதெல்லாம் ஆசை தீர அனுபவித்தவன், இன்று தன் இறைவனுக்காக அவற்றில் இருந்து தவிர்ந்து இருக்கின்றான். இதன் மூலம் அவனுக்கும் இறைவனுக்கும் உள்ள நெருக்கம் அதிகமாகின்றது. மேலும், அவனது ஈமான் இறைநம்பிக்கை பலப்படுவதுடன், அல்லாஹ்வுக்கு அவன்அடிமைப்பட்டிருப்பதையும், அல்லாஹ்வின் மீது அவன் கொண்டுள்ள அன்பின் வலிமையையும், மறுமையில் இறைவன் தனக்கு வாக்களித்து ள்ள சுவனத்தின் மீது அவன் ஆதரவு வைத்திருப்பதையும் காட்டுகின்றது.

நோன்பு  இறை நினைவை ஏற்படுத்துகின்றது :

ஒருவன் வயிற்றுப் பசியுடன் இருக்கும் நிலைக்கும், அவன் இறைவனுக்காகவே அந்தப் பசியை ஏற்றுக் கொள்வதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. மற்ற காலங்களில் பசி வந்தவுடன் பொறுமையை இழந்து விடக் கூடிய மனிதன் இறைவனுக்காகவே அந்தப் பசியைத் தாங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அவனுக்கு இறைவனைப் பற்றிய நினைவு அவனுக்கு அதிகப் படுத்தப்படுகின்றது. அந்த நிலையில் இறைவனைப் பற்றி சிந்திப்பதற்கும், இறைவனை (திக்ர்) நினைவு கூர்வதற்கும் உள்ளத்திற்கு தனிமை கிடைக்கின்றது. ஏனெனில் ஆசைப்படும் பொருள்களை யெல்லாம் உண்பதென்பது மெய் மறதியை உண்டாக்கும். சிலநேரம் இதயத்தையே இறுகச் செய்து விடும். சத்தியத்தை விட்டும் இதயத்தைக் குருடாக்கி விடும். இதனால் தான் முஹம்மது (ஸல்) அவர்கள் அறிவுறித்தினார்கள் :
ஆதத்தின் மகன் மிகவும் கெட்டதொரு பையை நிரப்புவானெனில் அது வயிறாகத் தான் இருக்கும். ஆதத்தின் மகனுக்கு அவனது முதுகை நிமிர்த்துவதற்கு ஒரு சில கவளங்களே போதுமானதாகும். அதிகம் உண்ண வேண்டுமெனில் (வயிற்றில்) மூன்றில் ஒரு பகுதியை உணவுக்காகவும், மற்றொரு பகுதியைத் தண்ணீருக்காகவும் இன்னொரு பகுதியைத் தனக்காகவும் ஆக்கிக் கொள்ளட்டும் (அஹமத், நஸஈ, இப்னு மாஜா)
இதையே அபூ ஸுலைமான் - அத் தாரானி அவர்கள் சொல்கிறார்கள் உடல் பசித்தும், தாகித்தும் இருந்தால் தான் இதயம் தெளிவடையும், மென்மை பெறும். வயிறு நிறைந்து விட்டால் இதயம் குருடாகி விடுகிறது.

செல்வச் செறுக்கு மறைகிறது
ஒரு செல்வந்தனுக்குச் செல்வத்தின் மூலம் அல்லாஹ் எந்த அருட்கொடையை வழங்கியுள்ளானோ அதனை அந்தச் செல்வந்தன் அறிந்து கொள்ள இந்த நோன்பு உதவுகின்றது. உணவு, பானம், மனைவியுடன் கூடி வாழும் பேறுகளை இறைவன் இந்தச் செல்வந்தனுக்கு வழங்கியுள்ளான். இத்தகைய அருட்கொடைகள் கிடைக்காமல் மக்களில் அநேகம் பேர் உள்ளனர். அத்தகைய அருட்கொடைகளைத் தனக்கு இறைவன் வழங்கியமைக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செய்கின்றான். அதற்காக இறைவனைப் புகழ்கின்றான். நோன்பின் பொழுது ஏற்படும் பசியானது செல்வந்தனைச் சிந்திக்க வைக்கின்றது. அவன் பசியுடன் கழிக்கும் ஒவ்வொரு நிமிடமும், அவனுக்கு அந்த ஏழையினுடைய பசியின் கொடுமையை உணர்த்தி, தன் சகோதரன் இத்தகைய நிலையை விட்டும் மீள வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி, தான தர்மங்களில் ஈடுபடவைக்கின்றது
இதனால் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்மக்களிலெல்லாம் அதிகம் வாரி வழங்கும் வள்ளலாய் திகழ்ந்தார்கள் என்று ஹதீஸில் வந்துள்ளது. அதுவும் ரமளான் மாதத்தில் - அவர்களை ஜிப்ரயீல் (அலை) சந்தித்து குர்ஆனை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும் நேரத்தில் இன்னும் அதிகமாக கொடை வழங்கு பவர்களாய் இருந்தார்கள்.

மனதைக் கட்டுப்படுத்தப் பயிற்சியளிக்கின்றது :

நோன்பு மனதைக் கட்டுப்படுத்தி, அதனை அடக்குவதற்கும் பயிற்சி அளிக்கின்றது. மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் இது தருகின்றது. இதன் மூலம் மனிதன் தன் மனதின் மீது ஆதிக்கம் செலுத்தி மனத்தை வென்றெடுக்க முடிகின்றது. நன்மையும், நற்பேறுகளும் எதில் உள்ளதோ அதன்பால் அதற்கு வழிகாட்டி அழைத்துச் செல்லவும் முடியும். ஏனெனில், மனித மனம் தீயதை அதிகம் தூண்டக் கூடியதாக இருக்கின்றது. எவருக்கு அல்லாஹ் கருணை புரிந்தானோ அவர்களது மனதைத் தவிர! மனிதன் தனது மனதின் கடிவாளத்தை அவிழ்த்து விட்டால் அது அவனை அழிவில் தள்ளிவிடும்! அதன் மீது அதிகாரம் செலுத்தி அதன் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தினால் உன்னதமான பதவிகளின்பால் - உயர்ந்த குறிக்கோளின் பால் அதனை அவன் வழி நடத்திச் செல்லவும் முடியும்.ஆணவத்தைக் கட்டுப்படுத்துல் நோன்பானது மனிதனது மனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, சத்தியத்திற்குப் பணிந்திடும் வகையில் - மக்களிடம் மென்மையாக நடந்து கொள்ளும் முறையில் அதன் ஆணவத்தைக் கட்டுப்படுத்துவதாகும். ஏனெனில், வயிறு நிரம்ப உண்பதும், பருகுவதும், பெண்ணிடம் உடலுறவு கொள்வதும், இவை அனைத்தும் மனதைத் தற்பெருமை கொள்ளும்படித் தூண்டி விடுகின்றன. சத்தியத்தை ஏற்காமல் ஆணவம் கொள்ளும்படியும், மக்களிடம் அகம்பாவமாக - வரம்பு மீறி நடக்குமாறும் செய்கின்றன. இவன் இவ்வாறு மாற்றம் கொள்வதற்குக் காரணம், மேற்கண்ட மூன்று தேவைகளையும் அவன் பெற்றுக் கொள்வதற்காக அவன் பல்வேறு வழிகளைக் கைக்கொண்டு, அதில் வெற்றி பெற்று விட்டானானால், தனது நோக்கத்தில் தான் வெற்றி பெற்று விட்டதாகக் கருதி, அதனால் அவன் பூரிப்பும், தற்பெருமையும் கொண்டு விடுகின்றான். இதற்காக அவன் மேற்கொண்ட முயற்சிகள் இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட வழிகள் தானா என்று கூட அவன் பார்ப்பதில்லை. இவையே இந்த மனிதனது இம்மை, மறுமை அழிவுக்குக் காரணமாகி விடுகின்றது. அல்லாஹ் யாருக்குப் பாதுகாப்பு அளித்தானோ அவரே இதிலிருந்து பாதுகாக்கப்பட்டவர் ஆவார்.

ஷைத்தானின் ஊசலாட்டங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன:

அதாவது பசி, தாகத்தின் காரணத்தால் இரத்த நாளங்கள் சுருங்குகின்றன. அப்படிச் சுருங்குவது உடலில் ஷைத்தான் ஒடும் இடங்களை நெருக்கடிக்குள்ளாக்குகின்றது. ஏனெனில் மனிதனின் உடலில் இரத்தம் ஓடும் எல்லா இடங்களிலும் ஷைத்தான் ஒடிக் கொண்டிருக்கின்றான். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் புகாரி3101, முஸ்லிம் 
நோன்பின் பயனாக ஷைத்தானின் ஊசலாட்டங்கள் அடங்குகின்றன! இச்சை மற்றும் கோபத்தின் வேகம் தணிகிறது! இதன் அடிப்படையில் நபியவர்கள் கூறினார்கள்: ஓ! இளைய சமுதாயமே! உங்களில் எவர் திருமண (ம் செய்து கொள்வதற்குச்) சக்தி பெற்றுள்ளாரோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்தக் கூடியது. வெட்கத்தலத்தைப் பாதுகாக்கக் கூடியது . எவர் அதற்குச் சக்தி பெற வில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும்! திண்ணமாக நோன்பு அவருக்கொரு கேடயமாகும்!புகாரி1905,முஸ்லிம்
திருமணம் மற்றும் அது சம்பந்தப்பட்ட ஆசைக்குக் கேடயமாகவும், அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாக நோன்பு திகழ்கின்றது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

ஆரோக்கியம் பேணப்படுகின்றது

நோன்பின் பொழுது உணவைக் குறைப்பதனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஜீரண உறுப்புக்களுக்கு ஓய்வு கிடைப்பதனால், உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய கழிவுகள்வெளியேற்றப்படுகின்றன. இதன் மூலம் உடலின் ஆரோக்கியம்பேணப்படுகின்றது

நோன்பின் முக்கியத்துவம் :

நோன்பானது நமக்கு மட்டும் கடமையான ஒரு அமலல்ல. நமக்கு முன் தோன்றி மறைந்த அனைத்துச் சமுதாயத்திற்கும் இது விதியாக்கப்பட்டுள்ளது. நோன்பு என்பது ஒரு மகத்தான வழிபாடு என்றிருக்காவிடில், இறைவன் எல்லா சமுதாயத்திற்கும் கடமையாக்கி இருக்க மாட்டான்.மேலும்,  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன. (புகாரி, முஸ்லிம் - அபூ ஹுரைரா (ரலி)).

ரமளான் மாதத்தின் சிறப்பு என்னவெனில் இந்த மாதத்தில் நோன்பாளிகளின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. தீமைகள் மறைக்கப்படுகின்றன. அதாவது, அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவராகவும், தன் மீது நோன்பு கடமையாக்கப்பட்டதைத் திருப்திப்பட்டவராகவும் - அதற் கான நன்மையை - நற் கூலியை எதிர்பார்த்தவராகவும் யார் நோன்பு நோற்கிறாரோ, மேலும் அது கடமையாக்கப்பட்டதை வெறுக்காமலும் அதன் நற்கூலியில் சந்தேகம் கொள்ளாமலும் யார் நோன்பு நோற்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான்!
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஐங்காலத் தொழுகைகளும், ஜும்ஆத் தொழுகைகளும் ரமளான் மாத நோன்புகளும் - அவ்வப்போதைய காலத்தின் பாவங்களைப் போக்கி விடுகின்றன. பெரிய பாவங்கள் தவிர்க்கப்படும் பட்சத்தில் ..! (முஸ்லிம்)
நோன்பில் அதன் நன்மைகளை இவ்வளவு தான் என ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் கட்டுப்படுத்த முடியாது. மாறாக நோன்பு நோற்றவருக்கு கணக்கின்றி கூலி வழங்கப்படுகின்றது! மேலும், இறைவன் கூறுகின்றான்: மனிதனின் எல்லா அமல்களும் அவனுக்குரியனவாகவே உள்ளன. ஆனால் நோன்பைத் தவிர! நிச்சயமாக! அது எனக்குரியது. உங்களில் யாரும் நோன்பு வேளையில் பாலியல் தொடர்பான பேச்சுக்கள் பேச வேண்டாம். கூசசலிட்டுப் பேச வேண்டாம். யாராவது அவரை ஏசினால் அல்லது சண்டைக்கு வந்தால், நான் நோன்பு நோற்றிருக்கின்றேன் என்று கூறி விடட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயில் இருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட அதிக வாசனை கொண்டதாகும்.
நோன்பாளிகளுக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று: நோன்பு திறக்கும் பொழுது அடையும் மகிழ்ச்சி, இரண்டாவது: தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி!.
முஸ்லிமில் உள்ள மற்றோர் அறிவிப்பில் - மனிதனின் ஒவ்வொரு அமலுக்கும் கூலி இரட்டிப்பாக வழங்கப்படுகிறது. ஒரு நன்மைக்குப் பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குவரை கூலி வழங்கப்படுகிறது. இறைவன் கூறுகின்றான் : நோன்பைத் தவிர! ஏனெனில் அது எனக்குரியது. நானே அதற்குக் கூலி வழங்குகிறேன்! காரணம் ஆசையையும் உணவையும் அவன் எனக்காக விட்டு விடுகின்றான். இந்த மகத்தான நபிமொழி நோன்பின் சிறப்புக்களைப் பல்வேறு வகையில் எடுத்துரைக்கிறது.
நோன்பின் சிறப்புக்கள் :
முதல் சிறப்பு: நோன்பாளியின் வாயிலிருந்து எழும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாசனையை விடச் சிறந்ததாகும். நோன்பின் பொழுது சிறுகுடல் இரப்பை உணவின்றிக் காலியாகக் கிடக்கும் பொழுது, வாயில் எழும் இயல்பான வாடை, மனிதர்களிடத்தில் மிகவும் வெறுப்புக்குரிய ஒன்று. ஆனால் இறைவனிடத்திலோ இது கஸ்தூரியின் வாசனையை விடச் சிறந்ததாகும்.
இரண்டாவது சிறப்பு : மலக்குகள் நோன்பாளிகளுக்காக - நோன்பு திறக்கும் வரை பாவமன்னிப்புக் கோரிக் கொண்டிருக்கின்றார்கள். மலக்குகள் அல்லாஹ்வுக்கு மாறு செய்யாத, இணை வைக்காதவர்களாக இருக்கின்றார்கள். இவர்களின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கின்றான். அவர்கள் பிரார்த்தனை செய்தவதன் நோக்கம் அல்லாஹ் அவர்களுக்கு அனுமதி வழங்கியிருப்பதும், அதன் மூலம் நோன்பாளிகளின் அந்தஸ்த்தைப் பிரகடனப்படுத்துவதும், அவர்களின் புகழை உயர்த்துவதும் அவர்கள் நோற்ற நோன்பின் சிறப்பை விளக்குவதுமாகும்.
மூன்றாவது சிறப்பு : அல்லாஹ் ஒவ்வொரு நாளும் சுவனத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றான். மேலும், கூறுகின்றான் : (சுவனமே) என் நல்லடியார்கள் கஷ்டத்தையும் சிரமத்தையும், பொருட்படுத்தாமல் உன் பக்கம் வருவதற்கு மிகவும் நெருங்கி விட்டார்கள். ஒவ்வொரு நாளும் அல்லாஹ் தனது சுவனத்தை அலங்கரிப்பதன் நோக்கம், அவனுடைய நல்லடியார்களை உற்சாகப்படத்துவதும் சுவனம் புகவதில் அவர்களுக்கு ஆர்வமூட்டுவதுமாகும்.
நான்காவது சிறப்பு : மூர்க்கத்தனமான ஷைத்தான்கள் சங்கிலிகளாலும், விலங்குகளாலும் பிணைக்கப்படுகிறார்கள். ஆதலால், அவர்களது விருப்பப்படி நல்லடியார்களைச் சத்தியத்திலிருந்து வழிகெடுக்கவோ அல்லது நல்லனவற்றைச் செய்ய விடாமல் அவர்களைத் தாமதப்படுத்தவோ முடியாது. இது நல்லடியார்களுக்கு அல்லாஹ் செய்யும் உதவியாகும். அவர்களின் விரோதியை விட்டும் அவர்களைத் தடுத்தும் விட்டான். அந்த விரோதி எப்படிப்பட்டவன் எனில், தன்னைப் பின்பற்று பவர்களை நரகத்தில் கொண்டு செல்லக் சேர்க்க் கூடியவன். இந்த நல்லுதவியால் தான் நல்லோர்கள் ஏனைய நாட்களை விட அதிகமாக இம்மாதத்தில் நல்லமல்கள் செய்வதிலும், தீமைகளை விட்டு விலகுவதிலும் அதிக ஆர்வம் காட்டுவதை நீங்கள் காண்கிறீர்கள்.
ஐந்தாவது சிறப்பு : இம்மாதத்தின் கடைசி இரவில் முஹம்மத் நபி (ஸல்)வர்களின் சமுதாயத்தினருக்கு அல்லாஹ் மன்னிப்பை வழங்குகின்றான். இது நோன்பையும், தொழுகைகளையும் அவர்கள் முறையாக நிறை வேற்றியிருக்கும் பட்சத்தில் தான்! அமல் செய்து முடித்தவுடன் அதற்கான கூலியை இந்தச் சமுதாயத்தி னருக்கு அல்லாஹ் முழுமையாக வழங்குவதென்பது அல்லாஹ்வின் அருட்கொடையாகும்.
திருக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு :
திருக்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவதற்கு முயற்சி செய்யுங்கள். குறிப்பாக இந்தப் புனிதமிகு ரமளான் மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது. இந்த மாதத்தில் திருக்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவது சிறப்பிற்குரியது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு தடவை ஓதிக்காட்ட நபியவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் எந்த ஆண்டு நபி (ஸல்) அவர்கள் மரணமடைந்தார்களோ, அந்த ஆண்டு - மனதில் நன்கு பதிய வைப்பதற்காகவும், உறுதிப்படுத்து வதற்காகவும் - இரண்டு தடவை ஓதிக் காட்டினார்கள்.
நல்லோர்களான நம்முன்னோர்கள் ரமளான் மாதத்தில் தொழுகையிலும், வெளியிலும் குர்ஆனை அதிகமதிகம் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்.
குர்ஆன் ஓதுவதென்பது இரண்டு வகைப்படும் :
1) திலாவா ஹுக்மிய்யா
2) திலாவா லஃப்ளிய்யா.
திலாவா ஹுக்மிய்யா என்றால், குர்ஆனின் செய்திகள் உண்மையென ஏற்பதும் அதன் சட்டங்களை அமுல்படுத்து வதுமாகும். அதன் ஏவல்களைச் செய்வதன் மூலமும், அதன் விலக்கல்களை விட்டு விலகுவதன் மூலமும் அதனைப் பின்பற்றுதலைக் குறிக்கும்.
திலாவா லஃப்ளிய்யா என்றால், கிராஅதுல் குர்ஆன் என்கிற ஓதுதலாகும். இதன் சிறப்பு குறித்து, ஏராளமாக குர்ஆனின் வசனங்களும், நபிமொழிகளும் உள்ளன. குர்ஆன் முழுவதையும் ஓதுவதன் சிறப்பு குறித்தும், குறிப்பிட்ட அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு குறித்தும் அவை பேசுகின்றன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது தன்னை ஓதக் கூடிய வர்களுக்கு மறுமை நாளில் பரிந்துரை செய்யக் கூடியதாக வரும். (முஸ்லிம்)
எந்த ஒரு குழுவினர் அல்லாஹ்வுடைய பள்ளிவாசலில் ஒன்று கூடி குர்ஆனை ஓதுகிறார்களோ மேலும் தங்களுக்கிடையே அதனை ஆய்வு செய்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயம் அமைதி இறங்குகிறது. அவர்களைக் கருணை சூழ்கிறது. மேலும் அவர்களை மலக்குகள் வளைந்து கொள்கிறார்கள். மேலும் அல்லாஹ் அவர்களைப் பற்றி - தன்னிடம் உள்ளவர்களிடம் எடுத்துரைக்கின்றான். (முஸ்லிம்)
குர்ஆனைத் தொடர்ந்து ஓதி வாருங்கள். எனது உயிர் யார் கை வசம் உள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! இந்தக் குர்ஆன் (தொழுவத்தில்) கட்டப்பட்டுள்ள ஒட்டகத்தை விட வேகமாக பிய்த்துக் கொண்டு ஓடக் கூடியதாக இருக்கிறது. (புகாரி)
உங்களில் எவரும் இந்த ஆயத் - வசனத்தை நான் மறந்து விட்டேன் எனறு சொல்ல வேண்டாம். உண்மையில் அவர் தான் மறக்கடிக்கப்பட்டார் (முஸ்லிம்)
நான் மறந்து விட்டேன் என்பதன் காரணம், குர்ஆனில் அவர் மனனம் செய்திருந்தவை குறித்து அவர் பொடுபோக்காக இருந்து விட்டார். அதை மறந்து விடும் அளவுக்கு அவர் அலட்சியத்துடன் இருந்திருக்கின்றார் என்பதையும் காட்டுகின்றது. அதாவது குர்ஆனுக்கும் அவருக்கும் தொடர்பின்மையைக் காட்டுகின்றது.
நிச்சயமாக இநதக் குர்ஆன் அல்லாஹ்வின் விருந்துபச்சாரமாகும். அவனது விருந்துபச்சாரத்தை ஏற்றுக் கொள்;;; ளுங்கள். திண்ணமாக இந்தக் குர்ஆன் அல்லாஹ்வின் உறுதியான கயிறு, தெளிவான ஒளி, பயனுள்ள நிவாவரணியாகும். இந்தக் குர்ஆனை யார் பற்றிப் பிடித்து நிற்கிறாரோ அவருக்குப் பாதுகாப்பாகவும், அதைப் பின்பற்றி வாழ்பவர்களுக்கு ஈடேற்றமாகவும் திகழ்கிறது. அதை ஓதுவதன் மூலம் ஒன்றுக்கு பத்து நன்மை என இறைவன் கூலி வழங்குவான். அல்லாஹ்விடம் கூலியையும் அவனது உவப்பையும் எதிர்பார்த்து யார் ஓதினாலும் அவர்களின் கூலி குறையாது. குறைவான அமல்களுக்கு ஏராளமான கூலிகள். நிவர்த்தி செய்ய முடியாத அந்த மறுமை நாளில் லாபம் ஈட்டி டத் தவறியவன் யாரோ அவன் தான் நஷ்டம் அடைந்தவன்.
பகல்-இரவு எல்லா நேரங்களிலும் எந்த அமல்கள் இறைவனாடு உங்களுக்க நெருக்கத்தை ஏற்படுத்துமோ அந்த அமல்களைச் செய்வதைப் பெரும் பாக்கியமாகக் கருதுங்கள். ஆயுட்காலம் வேகமாகச் சுருட்டப்படுகின்றது. காலங்கள் அனைத்தும் எவ்வாறு கழிந்து செல்கிறதெனில் பகலின் சில மணி நேரங்கள் கழிந்தது போன்றே தோன்றுகின்றது.
யா அல்லாஹ்! உனது வேதத்தை உனக்குத் திருப்தி அளிக்கும் வகையில் ஓதுகின்ற பாக்கியத்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! அதன் மூலம் எங்களை ஈடேற்றப் பாதை யில் செலுத்துவாயாக! இருள்களிலிருந்து எங்களை வெளி யேற்றி வெளிச்சத்திற்குக் கொண்டு வருவாயாக! மேலும் குர்ஆனை எங்களுக்குப் பாதகமாக அன்றி சாதகமாக ஆக்குவாயாக! அகிலம் முழுவதையும் படைத்துப் பரிபாலிக்கும் இரட்சகனே!
யா அல்லாஹ்! இந்தக் குர்ஆன் மூலம் எங்களது அந்தஸ்தை உயர்த்துவயாக! மேலும் இதன் மூலம் எங்களை விட்டும் தீமைகளைப் போக்குவாயாக! உனது கருணையினால் எங்களுக்கும் எல்லா முஸ்லிம்களுக்கும், கருணையாளர்களில் எல்லாம் கருணையாளனே! பாவமன்னிப்பும் வழங்குவாயாக!
யா அல்லாஹ்! எங்களுடைய நோன்புகளைப் பாதுகாப்பாயாக! எங்களுக்குப் பரிந்துரை செய்யக் கூடியதாக அவற்றை ஆக்கியருள்வாயாக! மேலும் எங்கள் பாவங்களையும், எங்கள் பெற்றோர் பாவங்களையம் அனைத்து முஸ்லிம்களின் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக!
நோன்பு நோற்காவிடில் .. .. ..
ரமளான் மாத நோன்பு ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு கடமையாக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் 9 ஆண்டுகள் நோன்பு நோற்றார்கள்
இஸ்லாம் ஐந்து அடித்தளங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி சொல்வது; தொழுகையை நிலை நாட்டுவது; ஜகாத் கொடுப்பது ; கஅபாவை ஹஜ் செய்வது ரமளான் மாதம் நோன்பு நோற்பது. (புகாரி, முஸ்லிம்)
ரமளான் நோன்பு கடமை என்பதன் மீது முஸ்லிம்கள் அனைவரும் உறுதியான, ஏகோபித்த கருத்து கொண்டுள்ளார்கள்! அது இஸ்லாமிய மார்க்க நடைமுறைகளில் தெளிவாக அறியப்பட்டள்ள விஷயமாகவும் உள்ளது.
எனவே, யார் இதன் கடமையை மறுக்கிறாரோ, அவர் நிராகரிப்பவராகி விடுகின்றார். அதிலிருந்து பாவமன்னிப்புக் கோரி திருந்தி விடுமாறு அவரிடம் சொல்லப்பட வேண்டும். அப்படிப் பாவமன்னிப்புத் தேடி அதன் கடமையை ஒப்புக் கொண்டாரெனில் சரி! இல்லையெனில், இஸ்லாத்தை விட்டும் விலகிச் சென்றவர் - நம்பிக்கை கொண்ட பின் நிராகரித்தவர் எனும் முறையில் அவரைக் கொன்று விட வேண்டும். பிறகு அவரைக் குளிப்பாட்டவோ கஃபன் - துணி அணிவித்து மைய்யித்து தொழுகை நடத்தவோ கூடாது! இறைவனிடம் அருள் வேண்டி அவருக்காகப் பிரார்த்தனையும் செய்யக் கூடாது! முஸ்லிம்களின் கப்றுஸ்தானில் அவரை அடக்கம் செய்யவும் கூடாது! காரணம்! அவரது துர்வாடையினால் மக்களுக்குத் துன்பம் ஏற்படக் கூடாது. அவரைப் பார்த்து அவருடைய குடும்பத்தினர் சிரமப்படக் கூடாது என்பதற்காக!
ஒருவர் இயலாமையின் காரணமாக ரமளான் மாதம் நோன்பு நோற்காமல் இருந்தால், அந்த மாத நோன்பு 29 எனில், 29 ஆகவும், 30 எனில் 30 ஆகவும் கணக்கிட்டு நோன்பு நோற்க வேண்டும். மரணம் வரை இயலாமை நீடித்தால் அதனால் குற்றமில்லை.
நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் ஒருவர் மரணம் அடைந்து விட்டால் அவருக்குப் பதிலாக அவருடைய பொறுப்பாளர்கள் நோன்பு நோற்பார். (புகாரி, முஸ்லிம்)
பொறுப்பாளர் என்பவர் அவருடைய வாரிசோ, உறவினரோ ஆவார். இறந்தவரின் மீது எத்தனை நாட்களின் நோன்பு கடமையாக உள்ளதோ அத்தனை நாட்களின் கணக்கில் ஒரு குழுவினர் சேர்ந்து ஒரே நாளில் அவர் சார்பாக நோற்பது கூடும்.
ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாக இமாம் புகாரி அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் : இறந்தவர் சார்பாக முப்பது பேர் ஒரே நாளில் நோன்பு நோற்றால் அது கூடும்.
பொறுப்பாளர் யாரும் இல்லை எனில் அல்லது இருக்கின்றார்., ஆனால் இறந்தவர் சார்பாக நோன்பு நோற்க விரும்பவில்லை எனில் - எத்தனை நாட்களை களா செய்வது இறந்தவருக்கு சாத்தியமாக இருந்ததோ, அத்தனை நாட்களின் எண்ணிக்கையில் ஒவ்வொரு நாட்களுக்கும் பகரமாக, அவரது சொத்தில் இருந்து உணவுப் பொருள் வழங்கப்பட வேண்டும். அதன் அளவு நல்ல கோதுமையில் அரைக்கிலோ மற்றும் 10 கிராம் ஆகும்.
நோன்பை முறிக்கக் கூடியவைகள் :
உடலுறவு கொள்ளுதல், சுய விருப்பத்துடன் விந்து வெளியாகுதல், உண்பதும், பருகுவதும், நோன்பாளியின் உடலில் இரத்தம் செலுத்துவது, ஊட்டச் சத்துக்கான ஊசி போட்டுக் கொள்ளுதல், இரத்தம் குத்தி வெளியாக்குதல், வேண்டுமென்றே வாந்தி எடுப்பது, மாதவிடாய் அல்லது பிரசவத்தின் உதிரம் வெளிப்படுதல் ஆகியவைகளாகும்.
நோன்பு திறக்கும் பொழுது ஓதும் துஆ :
தஹபழ்ழமஉ, வப்தல்லதில் உரூக்கு, வதபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்.
பொருள் : தாகம் தணிந்தது. நரம்புகள் நனைந்தும் விட்டன. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும். (அபூதாவூது)
உணவளித்தவருக்காக விருந்தாளியின் துஆ :
அல்லாஹும்ம பாரிக் லஹும் ஃபீமா ரஜக்தஹும் வஃக் ஃபிர்லஹும் வர்ஹம்ஹும்.
பொருள் : யா அல்லாஹ்! அவர்களுக்கு நீ வழங்கியவற்றில் அவர்களுக்கு பரக்கத்துச் செய்வாயாக! அவர்களுக்கு நீ பாவம் பொருத்தருளவும் செய்வாயாக! அவர்களுக்கு நீ அருளும் செய்வாயாக! (முஸ்லிம் : 3-1615)
குடும்பத்தாரிடம் (எவர் வீட்டிலாவது) நோன்பு திறந்தால் (நோன்பு திறப்பவராகிய) அவர் கூற வேண்டிய துஆ!
அஃதர இன்தகு முஸ்ஸாயிமூன், வ அகல தஆமகுமுல் அப்ரார், வஸல்லத் அலைகுமுல் மலாயிகது.
பொருள் : நோன்பாளர்கள் உங்களிடம் நோன்பு திறந்து விட்டனர்: நல்லவர்கள் உங்களுடைய உணவையும் உண்டு விட்டனர்: மலாயிகத்துகள் உங்கள் வகைக்கு பிரார்த்தனையும் செய்து விட்டனர். (அபூதாவுது, இப்னு மாஜா, நஸயீ)
, ,