குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

8.2.10

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஏசிக்களை எப்படி பயன்படுத்த வேண்டும்
வெயில் காலம் ஆரம்பித்துவிட்டது. இனி பெரும்பாலான வீடுகளில் “ஏசி’ இயந்திரங்களை பயன்படுத்தத் துவங்கிவிடுவர்..

கடைகளில் இனி ஏசி மெஷின்களின் விற்பனையும் அதிகமாக இருக்கும். மேல்தட்ட மக்கள் மட்டுமே இந்த ஏசி மெஷின்களை பயன்படுத்தி வந்த நிலை மாறி தற்போது சாமான்யர்களும் ஏசிக்கு அடிமையாகிவருகின்றனர்.. காரணம் வெப்பநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்..

ஏசி மெஷின் பழுதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்த செய்திகளும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வருகின்றன. காரணம் சரியான முறையில் நுகர்வோர்கள் இதனை உபயோகிக்காமல் போவதால் தான்..

ஏசிக்களை எப்படி பயன்படுத்த வேண்டும்?

வெயில் காலத்தில் நன்றாக குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக “ஏசி’யை 23 டிகிரிக்கும் குறைவாக வைக்கக் கூடாது. 23 டிகிரிக்கு குறைவாக கொண்டு செல்லும் போது “ஏசி’ இயந்திரத்திற்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டு திணறும். கம்ப்ரெஸர் என்று சொல்லக்கூடிய இயந்திரம் அதிக வெப்பத்தின் காரணமாக விரைவில் பழுதடைந்துவிடும்..
                                                                                 

அதிக நேரம் தொடர்ந்து இயங்குவதால், இதன் காரணமாக “ஏசி’ மெஷின் பாகங்களின் வெப்ப நிலையும் அதிகரிக்கும். இதனால் தீப்பிடிக்கும் அபாயமும் ஏற்படுகிறது.

குறிப்பாக ஏசி இயந்திரம் ஓடிக் கொண்டிருக்கும் போது எக்காரணம் கொண்டும் “ரூம் ஸ்பிரே’ அடிக்கக்கூடாது. ஃபெர்ப்யூம்கள் “ஏசி’ மெஷினின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி விடும்.

1 டன் அளவுள்ள “ஏசி’யை விட, 1.5 டன் அளவுள்ள “ஏசி’யில் மின்சார நுகர்வு குறைவாகத் தான் இருக்கும். காரணம் அந்த அறையை விரைவில் குளிர்ச்சியடைச் செய்து இந்த 1.5 டன் அளவுகொண்ட ஏசி விரைவில் கட்ஆஃப் நிலைக்கு சென்றுவிடும்.
அறையின் அளவு “ஏசி’ மெஷின் பொருத்துவதில் முக்கிய காரணியாகும். எனவே எவ்வளவு சதுர அடிக்கு எத்தனை டன் அளவு கொண்ட ஏசி பொருத்தவேண்டும் என்பதை அறிந்து அதன்படி பொருத்தவேண்டும்..

அறையின் அளவு 150 சதுரடி மட்டும் தான் எனில் 1.5 டன் அளவுள்ள ஏசி இயந்திரம் போதுமானதாகும்
ஏ சியை உடனுக்குடன் ஆன் ஆப் செய்ய கூடாது 
, ,