- காற்றழுத்த தாழ்வு எதிரொலி - இன்று டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - News7 Tamil
- பேட்ஜை கழற்றிவிட்டு பேசிய அதிமுக உறுப்பினர்கள் - Hindu Tamil Thisai
- நயினார் நாகேந்திரன் அவசரமாக டெல்லி பயணம் - Hindu Tamil Thisai
- சமையல் எரிவாயு விலை உயர்வு: மத்திய அரசு கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை - ராமதாஸ்! - News7 Tamil
- அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை - திமுக ரியாக்ஷன் என்ன? - Hindu Tamil Thisai
பதிவுகளில் தேர்வானவை
14.7.12
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக
புகைத்தல் ஹராமா ?
புகைத்தலைப் பற்றி நாளொன்றுக்கு ஒரு ஆராய்ச்சி ஏதேனும் ஓரிடத்தில் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சிகளில் ஒன்றேனும் “புகைத்தல் நல்லது” என குறிப்பிடுமா என ஆவலுடன் நோக்கும் புகை பிரியர்கள் ஏமாற்றம் மட்டுமே அடைகின்றனர்.
தற்போது வெளியாகியிருக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்று புகையை சுவாசிக்க நேரிடும் குழந்தைகளுக்கு குணாதிசயங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்திருக்கிறது.
அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி குழந்தைகள் நல மருத்துவ மனை நிகழ்த்திய இந்த விரிவான ஆய்வு குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் புகைசூழ் பகுதிகளில் தங்க நேரிடுவதால் ஏற்படும் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகிறது.
ஆஸ்த்மா நோய்க்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளை இந்த புகை மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள் உள்ளாக்குகிறது என கவலையுடன் குறிப்பிடுகிறார் இந்த ஆய்வை நிகழ்த்திய மருத்துவர் கிம்பர்லி யோல்டன்.
நிகோட்டினின் இணை பொருளான கோடினின் குருதியில் கலந்துள்ள அளவை வைத்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.
புகையை சுவாசிக்க நேரும் மக்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாக நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கடந்த ஆண்டு திடுக்கிடும் ஆய்வு ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புகைத்தல் என்பது புகைப்பவர்களை மட்டுமன்றி வளரும் இளம் தலைமுறையையே பாதிப்புக்கு உள்ளாக்குகிறது எனும் அதிர்ச்சிப் பாடத்தை இந்த புதிய ஆய்வும் உரக்கச் சொல்கிறது.
குறிப்பாக வீடுகளில் புகைக்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நலனை கேள்விக்குறியாக்குகின்றனர் என்றால் அது மிகையல்ல. புகைக்கும் பழக்கம் அறவே இல்லாதவர்கள் கூட பிறர் ஊதித் தள்ளும் புகையினால் பாதிப்புக்கு உள்ளாகும் அவலம் களையப்படவேண்டியதே.
புகைத்தல் தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் கேடு விளைவிக்கிறது என்பதை ஆய்வுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தன்மீதோ, குடும்பத்தின் மீதோ, சமூகத்தின் மீதோ அக்கறை உடையவர்கள் இந்தப் பழக்கத்திலிருந்து மீண்டு வருவார்களாக !
thanks saga.blogspot.com
மேலும் ஒரு தகவல்
வாஷிங்டன் : புகைப்பிடிப்பவர்கள் வெளிவிடும் புகையினால் உலகில் ஆண்டிற்கு ஆறு லட்சம்பேர் மரணிக்கின்றார்கள் என உலக சுகாதாரமையம் புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது.
இவ்வாய்வு 192 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவோர் குழந்தைகளாவர். குழந்தைகளுக்கு நிமோனியா, ஆஸ்துமா போன்ற நோய்கள் உருவாக இது காரணமாகிறது. 165000 குழந்தைகள் புகைபிடிப்பவர்கள் விடும் புகையை சுவாசிப்பதனால் மரணிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்காவைச் சார்ந்தவர்கள்.
சொந்த வீடுகளில் வைத்துதான் குழந்தைகளை இதர நபர்கள் விடும் புகை பாதிப்பை ஏற்படுத்துகிறது. புகை பிடிப்பவர்களில்லாத வீடுகளில் வசிக்கும் குழந்தைகளை விட புகைபிடிப்போர் வசிக்கும் வீடுகளில் வாழும் குழந்தைகளின் நுரையீரல்கள் மெதுவாகவே வளர்ச்சியடைகின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டில் உலகமுழுவதும் 40 சதவீத குழந்தைகளும், 33 சதவீத ஆண்களும், 35 சதவீத பெண்களும் மறைமுக புகையினால் பலியாகியுள்ளனர்.
தற்போது வெளியாகியிருக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்று புகையை சுவாசிக்க நேரிடும் குழந்தைகளுக்கு குணாதிசயங்களில் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்திருக்கிறது.
அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி குழந்தைகள் நல மருத்துவ மனை நிகழ்த்திய இந்த விரிவான ஆய்வு குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் புகைசூழ் பகுதிகளில் தங்க நேரிடுவதால் ஏற்படும் சிக்கல்களை முன்னிலைப்படுத்துகிறது.
ஆஸ்த்மா நோய்க்கு ஆளாகியிருக்கும் குழந்தைகளை இந்த புகை மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள் உள்ளாக்குகிறது என கவலையுடன் குறிப்பிடுகிறார் இந்த ஆய்வை நிகழ்த்திய மருத்துவர் கிம்பர்லி யோல்டன்.
நிகோட்டினின் இணை பொருளான கோடினின் குருதியில் கலந்துள்ள அளவை வைத்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டது.
புகையை சுவாசிக்க நேரும் மக்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாக நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கடந்த ஆண்டு திடுக்கிடும் ஆய்வு ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புகைத்தல் என்பது புகைப்பவர்களை மட்டுமன்றி வளரும் இளம் தலைமுறையையே பாதிப்புக்கு உள்ளாக்குகிறது எனும் அதிர்ச்சிப் பாடத்தை இந்த புதிய ஆய்வும் உரக்கச் சொல்கிறது.
குறிப்பாக வீடுகளில் புகைக்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நலனை கேள்விக்குறியாக்குகின்றனர் என்றால் அது மிகையல்ல. புகைக்கும் பழக்கம் அறவே இல்லாதவர்கள் கூட பிறர் ஊதித் தள்ளும் புகையினால் பாதிப்புக்கு உள்ளாகும் அவலம் களையப்படவேண்டியதே.
புகைத்தல் தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் கேடு விளைவிக்கிறது என்பதை ஆய்வுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தன்மீதோ, குடும்பத்தின் மீதோ, சமூகத்தின் மீதோ அக்கறை உடையவர்கள் இந்தப் பழக்கத்திலிருந்து மீண்டு வருவார்களாக !
thanks saga.blogspot.com
மேலும் ஒரு தகவல்
வாஷிங்டன் : புகைப்பிடிப்பவர்கள் வெளிவிடும் புகையினால் உலகில் ஆண்டிற்கு ஆறு லட்சம்பேர் மரணிக்கின்றார்கள் என உலக சுகாதாரமையம் புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது.
இவ்வாய்வு 192 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவோர் குழந்தைகளாவர். குழந்தைகளுக்கு நிமோனியா, ஆஸ்துமா போன்ற நோய்கள் உருவாக இது காரணமாகிறது. 165000 குழந்தைகள் புகைபிடிப்பவர்கள் விடும் புகையை சுவாசிப்பதனால் மரணிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்காவைச் சார்ந்தவர்கள்.
சொந்த வீடுகளில் வைத்துதான் குழந்தைகளை இதர நபர்கள் விடும் புகை பாதிப்பை ஏற்படுத்துகிறது. புகை பிடிப்பவர்களில்லாத வீடுகளில் வசிக்கும் குழந்தைகளை விட புகைபிடிப்போர் வசிக்கும் வீடுகளில் வாழும் குழந்தைகளின் நுரையீரல்கள் மெதுவாகவே வளர்ச்சியடைகின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டில் உலகமுழுவதும் 40 சதவீத குழந்தைகளும், 33 சதவீத ஆண்களும், 35 சதவீத பெண்களும் மறைமுக புகையினால் பலியாகியுள்ளனர்.