குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

9.11.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

முதுமையில் இளமை
முதுமையில் இளமை

almighty-arrhim.blogspot.comநமக்குத்தான் வயதாகிவிட்டதே என்று எண்ணாமல் உற்சாகத்துடன் சுறுசுறுப்புடனும் இளையர் என்ற எண்ணத்தில் வாழுந்தாலே போதும் முதுமையிலும் இளமையாக காட்சி தருவோம்.


முதுமையை எட்டும் போது கண்ணத்தில் குழுpயும் கண்களில் சுருக்கமும் பாதங்களில் வெடிப்பும் தலையில் நரையும் நம்மை வயதானவர்கள் என்று எளிதில் அடையாளம் காட்டிவிடும். வயதாகி விட்டது என்ற வருத்தமும் வயதானவர்கள் போல் நடந்துகொள்வதுமே நம்மை வயதானவர்களாக்கி விடும். எப்பொழுதும் இனிய இளமையான சிந்தனையுடன் இருப்பது இயற்கையை ரசிப்பது அன்பை பரிமாரி கொள்வது போன்றவை நம்மை இளமையுடன் வைத்திருக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தாலே இளமையான உணர்வுகளும் மனநிலையும் உங்களுக்குள் இருக்கும். உங்கள் மனநிலையில் வயதானவர்கள் என்கிற எண்ணத்தை தூக்கி எறிந்து விட்டு நான் இளைஞன் என்னால் எதையும் செய்ய முடியும் என் உடல் மிகமிக உற்சாகமாக இயங்குகிறது. நூறு விழுக்காடு இளமையாக ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று எண்ணி கொள்ளுங்கள். கண்டிப்பாக உங்கள் தோற்றத்தில் நீங்கள் இளைஞராக மாறிவிடுவீர்கள். அடுத்து இயற்கை அழகை நேசியுங்கள். புதியன பற்றி அறிந்துகொள்வதில்

ஆர்வம் காட்டுங்கள். அப்புறம் பாருங்க ஐம்பதிலும் அழகு...அழகு...அழகு.

கண்ணழகு

வயதானால் கண்களில் சுறுக்கம் ஏற்படுவது இயல்பு. முதுமையில் கண்களுக்கு கீழ் கருவளையம் வரும் அது வயதானவர்களாக தோற்றமளிக்க செய்யும்.கண் சுறுக்கத்தை போக்க கண்களுக்கு அதிகம் சிரமம் தரும் வேலைகளை தவிர்க்க வேண்டும்.அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது அதிக நேரம் புத்தகம் படிப்பது போன்ற பழக்கங்களை குறைத்து கொள்வது நல்லது. கண்களின் கருவளையத்தை தவிர்க்க ஆரஞ்சுப்பழச் சாற்றை கண்களில் படாமல் கண்ணுக்கு கீழ் தேய்த்து சற்று நேரம் கழித்து இதமான வெந்நீரில் கழவிவிடுங்கள் பிறகு அந்த இடத்தில் வெள்ளரி பிஞ்சை தேயுங்கள். மெல்ல மெல்ல கருவளையம் காணாமல் போய்விடும். கழத்து சுறுக்த்தை அகற்ற சொரசொரப்பாக அரைக்கப்பட்ட அரிசி மாவையும் கடலை மாவையும் கலந்து கழுத்துப் பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு தண்ணீரில் கழுவுங்கள். கழுத்து சுறுக்கத்திற்கு விடுதலை...
, ,