குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

30.12.14

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

காந்தியை ஏன் கொலை செய்தேன்


ஏன் காந்தியை கொன்ற

கோட்சேவிற்கு இவர்கள்

சிலை வைக்கிறார்கள்...!



இந்நாட்டின் தந்தை (Father of the Nation)

என்று அழைக்கப்பட்ட காந்தியார்

இந்து மதவெறிக்கு எப் படிப்

பலியானார். ஏன் பலியானார்?

என்பதை வேதனையுடன்

நினைவுபடுத்திக் கொள்ள நாம்

கடமைப் பட்டுள்ளோம். அதே சமயம் ..

இன்று காந்தியை கொன்றவனுக்கு

சிலை வைக்கவேண்டும்

என்று கொலைகாரகூட்டம் ஏன்

விரும்புகிறது என்பதையும்

விளங்கிகொள்ள வேண்டும்.

மகாத்மாவின் கொலை என்ற

தலைப்பில் பஞ்சாப் உயர்நீதிமன் றத்தின்

முன்னாள் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ்

ஜி.டி.கோஸ்லா அவர்கள் 1963-இல்

ஒரு நூல் எழுதி, 1977

வரை மூன்று பதிப்பு களுக்கு மேல்

அது விற்பனை யாகியுள்ளது.

அதில் அவர், காந்தியைச்

சுட்டுக்கொன்ற நாதுராம் விநாயக்

கோட்சே என்ற மராத் திப் பார்ப்பனர்,

அவருடைய சகோதரர் கோபால்

கோட்சே, அவருக்கு மிகவும்

உறுதுணை யாக இந்தக் கொலையில்

ஒத்துழைத்த நாராயண் ஆப்தே,

தத்தாத்ரேயா இவர்கள் எல்லாம் இந்துமத

தர்மத்தின்படிதான் இக் கொலையைத்

தாங்கள் செய்யத் துணிந்ததாகவும்,

பகவத் கீதையின் தாக்கத்தின்

விளைவு அது என்றும் தெளிவாக

நீதி மன்றத்திலே அளித்த

வாக்கு மூலத்தில்

குறிப்பிட்டுள்ளார்கள். மேற்காட்டிய

நூலில் இதை விரிவாக

எழுதியுள்ளார்

நீதிபதி கோஸ்லா அவர்கள்.

கொலை செய்ததாகவும்,

கொலை செய்வதற்கான சதியில்

ஈடுபட்டதாகவும், ஆயுதங்கள்

வெடி பொருள்கள் சட்டத்தின் கீழ்த்

தண்டனைக்குரிய குற்றங் களைச்

செய்ததாகவும் பின்வரும் எட்டுப் பேர்

குற்றம் சாட்டப் பட்டிருந்தனர்.

1. நாதுராம் கோட்சே, வயது 37,

ஆசிரியர், ஹிந்து ராஷ்டிரா, புனா.

2. அவருடைய சகோதரர் கோபால்

கோட்சே, வயது 27, ஸ்டோர் கீப்பர்,

இராணுவ டெப்போ, புனா.

3. நாராயண் ஆப்தே, வயது 34. நிர்வாக

இயக்குநர், ஹிந்து ராஷ் டிரா,

ப்ரகாஷம் லிமிடெட், புனா.

4. விஷ்ணு கர்க்காரே, வயது 37, உணவக

உரிமையாளர், அகமத் நகர்.

5. மதன்லால் பாவா, வயது 20,

அகதி முகாம், அகமத்நகர்.

6. ஷங்கர் கிஷ்டய்யா, வயது 27,

வீட்டு வேலையாள், புனா.

7. தத்தாத்ரேயா பர்ச்சூரே, வயது 49.

மருத்துவர், குவாலியர்.

8. விநாயக் சாவர்க்கர், 65, பார்-அட்-லா,

நிலக்கிழார், சொத்து உடைமையாளர்,

பம்பாய்.

கங்காதர் தந்வதி, கங்காதர் ஜாதவ்,

சூர்யதேவ் சர்மா ஆகிய மூவரும்

தலை மறைவாகி விட்டதாகச்

சொல்லப்பட்டது.

1948-ஆம் ஆண்டு ஜூன், 24-ஆம் நாள்

சாட்சிகள் விசாரணை தொடங்கப்

பட்டது. மொத்தத்தில் 149 சாட்சிகள்

விசாரிக்கப் பட்டனர்.திகம்பர்

பாட்கே என்பவர் அப்ரூவராக மாறிச்

சாட்சிய மளித்தார். சாட்சிகள்

விசாரணை நவம்பர் 6-ஆம் நாள்

நிறைவடைந்தது.

1949-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் நாள்

தீர்ப்பு வழங்கப் பட்டது.குற்றம்

சாட்டப்பட்டவர்களில் சாவர்க்கர்

விடு விக்கப்பட்டார். நாதுராம்

கோட்சே, அவரது நண்பர் நாராயண்

ஆப்தே ஆகிய இருவருக்கும் மரண

தண்டனை விதிக்கப் பட்டது.

தண்டனை பெற்ற ஏழு பேரின் சார்பாகப்

பஞ்சாப் உயர்நீதி மன்றத்தில் மேல்

முறையீடு செய்யப்பட்டது.

தனக்கு அளிக்கப்பட்ட மரண

தண்டனை குறித்துக்

கோட்சே எதிர்ப்புத் தெரிவிக்க

வில்லை. கொலை செய்வதற் கான

சதி நடைபெற்றது என்பதை மறுப்ப

தாகவே கோட்சேயின்

மேல்முறையீடு அமைந் திருந்தது.

காந்தியின் கொலைக்குத் தான்

மட்டுமே பொறுப்பு என்றும்

வேறு யாருக்கும் இதில்

தொடர்பு இல்லையென்றும்

கோட்சே உறுதியாகத் தெரிவித்தார்.

(அப்போது தான் ஆர்.எஸ்.எஸ்

சை காப்பாற்ற முடியும்)

உயர்நீதிமன்றத்தில் 1949-ஆம் ஆண்டு,

மே 2-ஆம் நாள் மேல் முறை யீட்டின்

மீதான விசாரணை தொடங் கியது.

தனக்காக வழக்குரைஞர்

வாதாடு வதை நாதுராம்

கோட்சே ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்

காகத்தானே வாதாடுவதற்கு

அனுமதிக் குமாறு நாதுராம்

கோட்சே கேட்டுக் கொண்டார்.

நாதுராம் கோட்சேயின்

கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வழக்கறிஞர் வைத்து வாதாடும்

அளவுக்கு வசதி இல்லாத

ஏழை என்று கோட்சேயைப் பற்றிச்

சொல்லப்பட்டது உண்மையல்ல;

துணிச்சல் நிறைந்த தேச பக்தன் என்றும்

இந்துமதக் கொள்கையில்

வெறியுடையவன் என்றும் தன்னைக்

காட்டிக் கொள்ள வேண்டும்

என்பதற்காகவே தனக்கு வழக்கறிஞர்

தேவை யில்லை என்று அவர்

தெரிவித்தார் என்பதுதான் உண்மை.

இந்துப் பண்பாட்டையும்

இந்துக்களி டையே ஒற்றுமையை

யும் காப்பதற்கு உறுதிபூண்ட ஓர்

அமைப்பாகிய ராஷ்டிரிய சுயம் சேவக்

சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.) நாதுராம்

கோட்சே தனது 22-ஆம் வயதில்

சேர்ந்தார். சில ஆண்டுகளுக்குப்

பிறகு புனாவில் குடியேறினார்.

அங்கிருந்த

போது இந்து மகாசபையின் உள்ளூர்க்

கிளைச் செயலாளராகப்

பொறுப்பேற்றிருந்தார். அய்தராபாத்

நிஜாமின் முஸ்லிம்

அரசு இந்துக்களின் உரிமை களைப்

பறிப்பதாகச் சொல்லப்பட்டு அதனால்

நடைபெற்ற

ஒத்து ழையாமை இயக்கத்தில்

பங்கெடுத்துக் கொண்டார்.அதற்காகக்

கைது செய்யப்பட்டுச் சில காலம்

சிறைத் தண்டனையும்

பெற்றி ருந்தார்.

இப்பொழுது நாதுராம்

கோட்சே இந்து மதம் சார்ந்த அரசியலில்

தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்

கொண்டார். நாட்டு வரலாறு,

சமுதாய

வரலாறு ஆகியவற்றை ஆழமாகப்

படித்தார். ஏற்றுக் கொண்ட

கொள்கைக்காகத்

தன்னை முழுமையாக ஒப்படைத்துக்

கொள்ள முடிவு செய்தார்.

பூனாவிலிருந்தபோது நாராயண் ஆப்

தேயைக் கோட்சே சந்தித்தார்.

பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக்

கொண் டிருந்த ஆப்தே அகர்னி என்ற

செய்தித் தாளைத் தொடங்கினார்.

அகர்னி என்ற பெயர் பின்னாளில்

ஹிந்துராஷ்டிரா என்று

மாற்றப்பட்டது.

முஸ்லிம்களுக்கு இணக்க மாகக்

காந்தியார் பேசியதையும்

ஜின்னாவின் கோரிக்கைகளுக்குக்

காந்தியார் இணங்கிப் போவதையும்

கோட்சே கடுமையாக எதிர்த்தார்.

இஸ்மாயில்

என்று பச்சை குத்திகொண்டு -

முஸ்லீம்கள் போல்

கத்னா செய்து கொண்டு ..

காந்தியை கொலை செய்த

அயோக்கியன் -

தீவிரவாதிக்கு இன்று ஊர் ஊராக

சிலை வைக்க வேண்டும்

என்று கொக்கரிகிறது பார்பனிய

கூட்டம்...

கோட்சே கூறுகிறான் :

காந்திஜி இல்லாத இந்திய அரசியல்,

நடைமுறை சாத்தியமானதாக,

பதிலடி கொடுக்கத் தக்கதாக, ஆயுத

சக்திகளுடன் கூடிய ஆற்றல்

மிகுந்ததாக இருக்கும் என உறுதியாக

நம்பினேன். என்னுடைய எதிர் காலம்

முழுமையாகப் பாழாகிவிடும்;

ஆனால், பாகிஸ்தானின்

ஊடுருவலிலிருந்து நாடு

காப்பாற்றப்படும்; இதில்

அய்யப்படுவதற்கு எதுவுமில்லை.

மக்கள் என்னை அறிவில்லாதவன்

என்றோ முட்டாள்

என்றோ அழைக்கலாம். ஆனால்,

வலிமையானதாகத் தேசம்

உரு வாவதற்குத் தேவையென நான்

நினைக் கின்ற அறிவார்ந்த

வழிமுறை களைக் கடைப்

பிடிப்பதற்கு உரிய

உரிமை கிடைத்துவிடும்.

இதைப்பற்றியெல்லாம் முழுமையாக

எண்ணியபிறகு நான் இறுதியாக

முடிவெடுத் தேன்; ஆனால்,

எனது முடிவைப் பற்றி நான்

யாரிடமும் பேசவில்லை.(ஆர் எஸ்.எஸ்

காப்பற்ற) என் இருகைகளிலும்

துணிச்சலைத் தேக்கினேன்;

பிர்லா மாளிகையில், பிரார்த்தனைத்

திடலில் 1948, ஜனவரி 30-ஆம் நாள் துப்

பாக்கியால் காந்திஜியைச் சுட்டேன்.

இனி, நான் சொல்வதற்கு எதுவும்

இல்லை; மனிதர்களால்

அமைக்கப்பட்டுள்ள

நீதிமன்றத்திற்கு அப்பால்

வெறொரு நீதி மன்றம்

இருக்கு மானால் அங்கு என்னுடைய

செயல் அநீதியானது என்று சொல்லப்பட

மாட்டாது என்ற

நம்பிக்கை எனக்கு முழுமையாக

இருக்கிறது.

சாவுக்குப்பிறகு செல்வதற்கு

அப்படிப்பட்ட ஓர் இடம் இல்லை என்பதால்

அதைப்பற்றிச்

சொல்வதற்கு ஒன்றுமில்லை. மனித

குலத்தின் நன்மையைக்

கருதியே அந்தச் செயலை நான் செய்ய

நேர்ந்தது. இலட்சக்கணக்கான இந்துக்

களுக்கு அழிவைத் தருகின்ற

கொள்கையைக் கொண்டிருந்த

ஒருவரைத்தான் துப்பாக்கி யால் நான்

சுட்டேன்.

-இவ்வாறு கோட்சே உயர்நீதிமன்ற

மேல்முறையீட்டில்

தனது வாக்கு மூலத்தைக்

கூறிமுடித்தார்.

மதவெறி மோதல்களை உருவாக்கி

நாட்டை -

இந்துநாடு என்று அறிவிப்பதே இந்த

காவி தீவிரவாதிகளின்

ஒரே குறிக்கோள் ...

அதே நிறைவேற்ற என்ன

சூழ்ச்சிகளையும் செய்வார்கள் ...

படைத்தவன் அதைவிட சூழ்ச்சிகாரன்...

அல்லாஹ்வே நமக்கு போதுமானவன்.
, ,