குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

5.1.12

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

அநாதையைப் பராமரித்தல்
அநாதையைப் பராமரித்தல்

அல்லாஹ் கூறுகிறான் : நீர் அநாதைகளுடன் கடுமையாக நடந்து கொள்ளாதீர். (93:9) அல்லாஹ்வின் மீதுள்ள அன்பினால் ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் கைதிகளுக்கும் உணவளிக்கிறார்கள். (76:8)
நானும் அநாதையைப் பராமரிப்பவரும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என நபி (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சுட்டிக் காட்டி கூறினார்கள். விரல்களுக்கிடையேயும் சிறிது இடைவெளி விட்டிருந்தார்கள். (அறிவிப்பவர் : ஸஃது (ரலி)
நூல் : புகாரி (6005)
நானும் அநாதையைப் பராமரிப்பவரும், அந்த அநாதை சொந்தத்தில் உள்ள அல்லது சொந்தத்தில் அல்லாத அநாதையாக இருந்தாலும் சரி - சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று நபி (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலையும் நடு விரலையும் காட்டிக் கூறினார்கள். அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம், திர்மிதி (1983)
பயன்கள் :
அநாதைகளைப் பராமரிப்பது சிறப்பானதாகும். அதற்கு ஆர்வமூட்டப்பட்டுள்ளது.
இது சுவனத்தில் நுழைவதற்கும் அதில் அந்தஸ்துகள் உயர்வதற்கும் காரணமாக அமைகின்றது.
இங்கு அநாதை என்பது சொந்தத்தில் உள்ள அல்லது சொந்தம் அல்லாத எல்லா அநாதைகளையும் குறிக்கும்.
அநாதைகளின் பொருளை உண்பது குறித்த எச்சரிக்கை
அநாதைகளின் சொத்துக்களை யார் அநியாயமாக உண்கிறார்களோ அவர்கள் உண்மையில் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும் விரைவில் அவர்கள் கொளுந்து விட்டெரியும் (நரக) நெருப்பில் வீசி எறியப்படுவார்கள். (4:10)
நாசத்தைத் தரக் கூடிய ஏழு காரியங்களை விட்டும் விலகிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் அல்லாஹ்வின் தூதரே! அவை என்னென்ன? என்று தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, சூனியம் செய்வது, அல்லாஹ் கண்ணியத்திற்குரியதாக்கிய உயிரை நியாயமின்றிக் கொல்வது, வட்டி உண்பது, அநாதையின் பொருளை உண்பது, போர்க்களத்தில் புறமுதுகு காட்டுவது, முஃமினான கற்புள்ள அப்பாவிப் பெண்களை அவதூறு சொல்வது ஆகியவையாகும். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (2766) முஸ்லிம்.
இறைவா! அநாதை, பெண் ஆகிய இரு பலவீனர்களின் உரிமையை கண்ணியத்திற்குரியதாய் ஆக்குகிறேன்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : குவைலித் பின் உமர் (ரலி) நூல் : நஸயீ
பயன்கள் :
அநாதையின் பொருளை அநியாயமாகக உண்பது பற்றி எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்வது நாசத்தைத் தரக் கூடிய பெரும் பாவங்களில் ஒன்றாகும்.
ஒருவர் யாரை நேசிக்கிறாரோ அவருடனே இருப்பார்
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் கியாமத் நாள் எப்போது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம் நீ அந்த நாளுக்காக எதைத் தயார்படுத்தி வைத்திருக்கிறாய்? என்று கேட்டனர். அதற்கவர் அல்லாஹ்வுடைய அன்பையும் அவன் தூதருடைய அன்பையும் (தயார்படுத்தி வைத்திருக்கிறேன்) என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் ஒருவர் யாரை நேசிக்கிறாரோ அவருடன் இருப்பார் எனக் கூறினார்கள். அறிவிப்பவர் ; அனஸ் (ரலி) நூல் : முஸ்லிம், திர்மிதி (2493)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அறிவிக்கின்றார்கள் : ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் ஒரு கூட்டத்தை நேசிக்கிறார். அவர்களை (அதாவது அவர்களுடைய அந்தஸ்தை) அவர் அடையவில்லை. இவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒருவர் யாரை நேசிக்கிறாரோ அவருடன் இருப்பார் என்று பதிலளித்தார்கள். நூல் : முஸ்லிம் (2640), திர்மிதி (2994)
ஆன்மாக்கள் ஒன்றுடன் மற்றொன்று இணைந்து கொள்ளும் இயல்புடையன. அவை நல்ல ஆன்மாக்களைக் கண்டால் அவற்றுடன் சேர்ந்து கொள்ளும். தீய ஆன்மாக்களைக் கண்டால் விலகி விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), (முஸ்லிம், அபூதாவூத்)
பயன்கள் :
நல்லவர்களை நேசிப்பது சிறப்பு, இது சுவனத்தில் அவர்களுடன் இருப்பதற்குக் காரணமாக அமைகின்றது. மற்ற அமல்கள் (வழிபாடுகள்) குறைவாக இருந்தாலும் சரியே!
தீயவர்களை, காபிர்கள் நேசிப்பது அபாயகரமானது.
ஒருவர் எந்தக் கூட்டத்தை நேசிக்கிறாரோ மறுமையில் அவர்களுடன் இருப்பார்.
உருவங்கள் பற்றி சட்டம்
நாய்களும், உருவப்படங்களும் இருக்கின்ற வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பது நபிமொழி. நூல் : புகாரி (5949), முஸ்லிம், திர்மிதி (2956) அறிவிப்பவர் : அபூதல்ஹா (ரலி).
கியாமத் நாளில் திண்ணமாக அல்லாஹ்விடத்தில் கடுமையான வேதனைக்குரியவர்கள் உருவங்கள் வரையக் கூடியவர்களே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி) நூல் : புகாரீ (5950), முஸ்லிம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு தலையணை வாங்கினார்கள். அதில் உருவப்படங்கள் இருந்தன. அதைப் பார்த்ததும் நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்குள் வராமல் வாசலிலேயே நின்று விட்டனர். அவர்கள் முகத்தில் வெறுப்பு தென்பட்டதைப் பார்த்து ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடத்திலும் அவன் தூதரிடத்திலும் மன்னிப்புக் கோருகிறேன். நான் செய்த பாவம் என்ன? என்று கேட்டார்கள்.அதற்கவர்கள் இது என்ன தலையணை? என்று கேட்கவும், நீங்கள் அமர்வதற்காகவும் தலையணையாகவும் வைத்துக் கொள்வதற்காகவும் நான் அதை வாங்கினேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், இந்த உருவங்களைத் தீட்டியவர்கள் மறுமையில் வேதனை செய்யப்படுவார்கள். நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் என அவர்களிடம் கூறப்படும் என்று கூறி விட்டு, உருவங்கள் இருக்கின்ற வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் எனவும் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவாகள், நூல் : புகாரீ (5961), முஸ்லிம்.
பயன்கள் :
உருவங்கள் வரைவது விலக்கப்பட்டதாகும். அது பெரும் பாவங்களில் ஒன்றாகும்.
உருவப்படங்கள் இருக்கின்ற வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள்.
உருவங்கள் வரைபவர்களே மறுமையில் கடுமையான வேதனைக்குரியவர்கள்.
, ,