குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

9.8.13

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஈகை பெருநாள்
almighty-arrahimஈந்துவக் கும்திரு நாளாம்இகமதில் ஈத்பெருநாள்

நீந்திய பாவம் கடக்கப் புரிந்தநம் நீள்தவத்தை

ஏந்திய நோன்பால் விளைந்த பரிசினை ஏற்றிடத்தான்

சாந்தியாம் சொர்க்கம் கிடைக்கும் உறுதியைச் சாற்றிடுமே



புண்ணியம் செய்தவ ரென்றும் மகிழ்ந்துப் புகழ்ந்திடத்தான்

எண்ணிலா நன்மை பொழிந்திடச் செய்யும் இறையருளால்

மண்ணிலி றங்கிச் சலாமுடன் வாழ்த்தும் மலக்குகளால்

கண்ணியம் செய்வதை யென்றும் நினைத்துக் களிப்புறவே

இற்றைத் திருநாள் நமக்குப் பிறையாய் இறங்கியது

பெற்ற கொடையை விடாமல் நுகர்வோம் பெருமிதமாய்

கற்ற பயிற்சிகள் நிற்க மனத்திற் கவனமுடன்

சற்று முயற்சி எடுப்பதில் நீயும் தயங்கிடாதே


அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
, ,