குர்ஆனை பொருள் உணர்ந்து தினம் ஒரு பக்கமாவது படியுங்கள்

பதிவுகளில் தேர்வானவை

31.3.16

அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருளும் நற்கிருபையும் புரிவானாக

ஜாகிரின் படிக்கட்டுகள் -19
almighty-arrahim.blogspot.com
வாழ்க்கையில் முன்னேறத்தான் எல்லோரும் சிந்திக்கிறோம். பணம் / சொத்து / ஹெல்த் / உறவுகள், இருப்பினும் சமயங்களில் ஏன்
நாம் எதில் சிந்திக்கிறோமோ அதில் பின்னோக்கி போகிற மாதிரி இருக்கிறது.

இது இன்றைக்கு வந்த கேள்வியல்ல, மனித நாகரீகம் தோன்றிய காலத்திலேயே இதுவும் தோன்றியிருக்கலாம்.

முன்பு நான் சொன்ன கான்சியஸ் மைன்ட் / சப்கான்சியஸ் மைன்ட் விசயங்களில் கவனிக்க வேண்டிய விசயம். பிரைன் செல்ஸ். நாம் தொடர்ந்து எந்த விசயத்தை நமது மைன்ட் தன் வசம் வைத்துள்ளது என்பதை செக் செய்ய வேண்டியது நம் கடமை. தொடர்ந்து ஒரு விசயத்தை நினைக்க நினைக்க அது ப்ரைன் செல்லாக உருவாகிறது. அதனால்தான் சின்ன வயதிலிருந்து நல்ல விசயங்கள கேட்க பழக்கப் படுத்துகிறார்கள். நாம் வளர்ந்த பிறகு கேட்கும் குப்பைகளை தூர வீசத்தெரியவில்லை என்றால் உள்ளுக்குள் இருந்து குடைச்சல் போடும். இப்போது முன்னேர முடிவெடுத்தவர்கள் ஏன் தொடர்ந்து முன்னற முடியாமல் போவதற்கான காரணம். முடிவெடுத்த பிறகு அவர்களின் தொடர் சிந்தனைகள் வாழ்க்கையின் பிரச்சினைகளை மட்டும் எப்படி சமாளிப்பது என்ற ஒரே சி.டி யை திருப்பி திருப்பி கேட்டுக் கொண்டிருக்கும்.இப்போது புரிந்திருக்கும் தொடர்ந்து கேட்கப்படும் "பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி?" சி.டி சுபிட்சத்துக்கு இழுத்து செல்லாமல்,பிரச்சினைகளுடன் உங்கள் மைன்டை முழு "ரேம்" ஐ பயன்படுத்தி ஒட்டிக் கொண்டிருக்கும். மைன்ட் மட்டுமல்ல, மண்டையும் சூடாகுமா ஆகாதா?.

கமன்டோ பயிற்சிகளில் கண்ணுக்கு நேராக நின்று சத்தம் போட்டு பயிற்சியில் ஈடுபடும் வீரர்களை ஒரே விசயத்துக்கு தயார் படுத்துவது இதற்காகத்தான்.உங்கள் எனர்ஜியுடன் உங்களை இணைப்பதற்கான பயிற்சிகளில் ஒன்று கண்ணாடி முன்னால் நின்று உங்கள் கண்ணில் உள்ள சின்ன கறுப்பு வளையத்தை கவனிப்பது [ஒரு 10 நிமிடமாவது]. கொஞ்சம் கஷ்டம்தான் என்றால் மூச்சுகளுக்கான இடைவெளி மீது கவனம் செலுத்துவது Between Inhalation and exhalation.

இதை நான் எழுதக் காரணம் நம் வாழ்க்கை எதை ஆணித்தரமாக நம்மிடம் கேட்கிறதென்றால் ஒவ்வொரு நிமிடத்தின் உண்மைகளையும் உங்களை வைத்தே சந்திக்க வைக்கிறது.[அதுதான் தெரியுமே!!என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட வேண்டாம்]உண்மையை சொன்னால் பெரும்பாலும் நாம் நிதர்சனங்களை சந்திக்காமல் தப்பிக்க பார்க்கிறோம்.

நம் மனதுக்கு எது சந்தோசம் தருகிறதோ அதை நாம் சந்திக்க தயார். ஆனால் எது கவலை அளிக்கிறதோ அதை சந்திக்காமல் அதற்கான காரணத்தை உங்கள் கற்பனையில் உதிக்கும் ஏதாவது காரணத்தோடு இணைத்து விடுவது.

ஒரு உதாரணமாக சொன்னால் நல்ல சம்பாதியம் இருந்தால் நன்றாக செலவு செய்வது,சம்பாத்யம் குறைந்தால் அதற்கு எந்தவகையிலும் தானும் ஒரு காரணம் என்ற உண்மையை மீறி அவன் / இவன் / காலம் / சூழ்நிலை என்று அடுக்கிக் கொண்டே போவது.

எப்போதெல்லாம் தப்பிக்க நினைக்கிறீர்களோ அப்போதெல்லாம் வாழ்க்கையை நீங்கள் சந்திக்கவில்லை. வாழ்க்கையை எப்போது சந்திக்கவில்லையோ அங்கே நீங்கள் இல்லை.

அதனால்தான் உங்களை நீங்கள் முதலில் சந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

எப்போதெல்லாம் உங்களை சரியாக நீங்களே சந்திக்கும் தருனம் வருகிறதோ அப்போதெல்லாம் நீங்கள் ஒரு கிரியேட்டர் [புதிதாக உருவாக்குபவர்] ஆகிறீர்கள்.அதனால்தான் வாழ்க்கையின் போராட்டம் / சவால் எதுவானாலும் "விழிப்புணர்வுக்கும் - விழிப்புணர்வு இல்லாத" தொடர்பே பிரதானம். அல்லது மையப்புள்ளி.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஒரு விதமான சூழ்நிலையை சந்திக்கும்போது அவர்கள் தப்பிக்காமல் எதிர் கொண்டதாலேயே வெற்றியடைந்ததாக சொல்வார்கள்.
உன்னால் ஒரு காசுக்கும் புண்ணியமில்லை...

உன்னால் என்ன சாதிக்க முடியும்?

எப்படி எங்களை விட்டு போய் வாழ்ந்து விடுவாய் என்று பார்க்கிறேன்.
இதுபோன்ற கேள்விகள் தன்னை அழித்து க்கொள்ளும் தற்கொலைக்கும் தூண்டக் கூடியது. எப்போது சவால்களை ஏற்றுக் கொள்கிறோமோ அப்போதே நமக்குள் இருக்கும் கோழை இறந்து விடுகிறான்.

தொடக்கூடிய தூரத்திலும் , பார்க்க கூடிய தூரத்திலும் உள்ள விசயங்களில் நம்பிக்கை வைப்பது ஒன்றும் பெரிதல்ல. பார்க்க முடியாத தூரத்தில் உள்ள விசயங்களையும் நம்பி சாதிப்பதில்தான் வெற்றி இருக்கிறது.

Impact of Negativity in Life:

எவ்வளவு பெரிய சாதனையாளருக்கும் சறுக்குதலை ஏற்படுத்துவது நெகட்டிவான விசயங்கள். இதை முதலில் மனரீதியாக கட்டுப் படுத்துவதை விட நம்மை சுற்றி நடக்கும் நெகட்டிவ் விசயங்கள் மற்றவர்கள் நமக்குள் வந்து கொட்ட அனுமதிப்பதுதான்.

பொதுவாக இவர்களுடைய அறிவுரைகளை கேட்டு அதற்கு நமது மைன்டில் ஒரு ஃபைல் உருவாக்கி பிறகு அவர்களிடம் என்ன பேசுவது அல்லது நமது தொழிலை அல்லது படிப்பை கெடுக்க வரும்போது எப்படி சமாளிப்பது என்று அதிகம் சிந்திக்காமல் அதற்கு நேரமும் ஒதுக்கி கொண்டு இருக்காமல் அவர்களை சரியாக கையாள்வது என்னவென்றால் அவர்களை தவிர்த்து விடுவதே சிறந்த முடிவு.

ஒரு சிறந்த கம்பெனியின் சி.இ.ஓ போன்றவர்கலுக்கும் இதுபோன்ற நெகட்டிவ் ஆட்களை சமாளிக்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும்,அதற்காக அவர்கள் அதிக நேரம் ஒதுக்குவதில்லை, செக்ரட்டரியிடம் சொல்லி ' சார் முக்கிய மீட்டிங்கில் இருக்கிறார்" என்ற பதிலே வரும். சரி பிராக்டிக்கல் வாழ்க்கைக்கு செக்ரட்டரிக்கு எங்கே போவது என்று கேட்கலாம். குறைந்தபட்சம் உங்கள் வாசல் கதவுகளை திறந்து வைத்து வரவேற்காமல் இருக்கலாம் அல்லவா?.

நான் முன்பு இருந்த ஆபிசின் நுழைவாயிலில் ஒட்டியிருந்த வாசகம்...சில சமயங்களில் இது போன்ற வாசகங்களும் வாழ்க்கையை செதுக்கும்.

Small people talk about Other People,
Average people talk about Things,
Great people talk about Ideas

இன்னும் சந்திப்போம்
ZAKIR HUSSAIN
நன்றி அதிரை நிருபர்
, ,